முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, December 26, 2018

கல் நாதஸ்வரம்--கும்பகோணத்தில்

இசை உலகின் கலை பொக்கிஷம்!
கோயில் நகரம் என்றழைக்கப்படும் ள பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது கல் நாதஸ்வரம் ஒன்று. சிற்பியின் கை வண்ணத்தில் கல் நாதஸ்வரமாக பிறந்து, இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும் இன்னிசையாக தவழ்ந்து ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும் இந்த கல் நாதஸ்வரம் உருவாகி ஆண்டுகள் பல நூறு இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்
இந்தக் கல் நாதஸ்வரம், சாதாரண நாதஸ்வரத்தை விட சுமார் ஆறு மடங்கு கூடுதல் எடையுடையது. சுமார் இரண்டடி நீளமுடையதாகவும் வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் மாதிரியான அமைப்பிலும் உள்ளதாகும். மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழர் இசையானது அதிகாலை துயில் எழுப்புவதில் தொடங்கி, நள்ளிரவு உறங்கும் காலம் வரை இசைக்கும் தமிழர் மரபாகும். பருவத்துக்கு ஏற்ற கருவிகளை உருவாக்கி அதில் உருவாகும் இசையினை இசைத்து இறைவனை வணங்கினர் ஆதி தமிழர்கள் என்பது வரலாறு.
மரத்தில் செய்வதற்கும் முந்தைய ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்குச் சான்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.
மற்றொரு கல் நாதஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.
கல் நாதஸ்வரத்தின் உடல் அமைப்பு : முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஒரு நாணல் புல்லில் செய்யப்படுகிறது. கல் நாதஸ்வரத்தில், உலவுப்பகுதி மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூணல் இணைக்கப்பட்டு வெங்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாகி உள்ளது இந்த கல் நாதஸ்வரம்.
""மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும், ஆனால், கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்கள் மட்டுமே வாசிக்க முடியும். இதில் 3முதல் 3- 1/2 கட்டை சுதியில் வாசிக்க இயலும். மேலும், சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும் எனவும் பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும்'' என்கிறார் திருக்கோயில் வித்வான் சாமிநாதன் பிள்ளை.
குடந்தையில் வாழ்ந்து மறைந்த நாதஸ்வர மேதை கும்பகோணம் பக்கிரி சாமி பிள்ளை சுமார் 60 வருடங்களுக்கு முன் கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் திருக்கோயில் நாதஸ்வர வித்வானாக இருந்த குஞ்சிதபாதம் பிள்ளை, 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் வாசித்து வருபவர் தற்போதுள்ள நாதஸ்வர கலைஞர் ஆவார்.
""சுமார் 15 வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனைவி கமலா கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு வந்தபோது கல் நாதஸ்வரத்தினை இசைக்க சொல்லி கேட்டு சென்றார் என்பதையும் அதன்பின் ஒரு விழா காலத்தில் நடைபெற்ற சப்தாவர்ணம் எனும் திருநாள் விழாவில் திருக்கோயில் இசைக்கலைஞர் இதனை வாசித்தார். அவரே மறுபடியும் 29 செப்டம்பர் 2017 அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கல் நாதஸ்வரத்தில் ஒரு மணி நேரம் வாசித்தார்'' என்று திருக்கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்:
சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரி,க,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மஹாபாரதம் கூறும். ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.
இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். சட்ஜமம் மயில் அகவுதலையும்; ரிஷபம் மாடு கத்துதலையும்; காந்தாரம் ஆடு கத்துவதையும்; மத்யமம் அன்றில் பறவை கூவுதலையும்; பஞ்சமம் குயில் கூவுதலையும்; தைவதம் குதிரை கனைப்பதையும், நிஷாதம் யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.