முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Wednesday, November 14, 2018

"பாசிசம் என்றால் என்ன?"

"பாசிசம் என்றால் என்ன?"

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் 'தேசிய நலனுக்காக தனிமனிதர்கள் தியாகம் செய்ய வேண்டும்' என்று பேசப்படும் தத்துவத்தின் கடுமையான செயல்வடிவம் தான் பாசிசம் ஆகும். இது ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு கருத்தாகும். 1919 முதல் 1945 வரை பாசிசம் ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. இரண்டாம் உலகப்போருக்கு இந்த சித்தாந்தமே காரணம் ஆகும்.
அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறை இதுவாகும். அவ்வாறு மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு போர்வையாக 'தேசத்தின் நலன்' என்பதை இவர்கள் முன்வைப்பார்கள்!
இந்த சித்தாந்தத்தை உருவாக்கியவர் இத்தாலியின் சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினி என்பவராகும். தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, மக்களை இராணுவமயமாக்குதல், மேன்மக்கள் - கீழ்மக்கள் என்கிற ஏற்றத்தாழ்வை கடைபிடித்தல் உள்ளிட்டவை இந்த சித்தாந்தத்தின் அடிப்படைகள் ஆகும்.
ரோமானியப் பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசியோ (fascio) எனப்படும். அதிலிருந்து உருவான வார்த்தையே பாசிசம் (Fascism).

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.